குற்றுயிராய்க் கிடந்த வீரரை நரி சூழ்ந்திருந்தமை
 
478. சாமளவும் பிறர்க்குதவா தவரை நச்சிச்
       சாருநர்போல் வீரருடல் தரிக்கும் ஆவி
போமளவும் அவரருகே இருந்து விட்டுப்
      போகாத நரிக்குலத்தின் புணர்ச்சி காண்மின்.

     (பொ-நி.)  சாமளவும்  உதவாதவரை,  சாருநர்போல், ஆவிபோம்
அளவும்,  அருகே  இருந்து,  விட்டுப்போகாத,  நரிக்குலத்தின்  புணர்ச்சி
காண்மின்! (எ-று.)

     (வி-ம்.) நச்சி-விரும்பி. சாருநர்-அடைவோர். தரித்தல்-நிலைபெறல்.
ஆவி-உயிர். நரிக்குலம்-நரிக்கூட்டம். புணர்ச்சி-கூட்டம்.
                                                           (7)