விழி இயல்பு கூறி விளித்தது 48. | கடலில் விடமென அமுதென மதனவேள் | | கருதி வழிபடு படையொடு கருதுவார் உடலின் உயிரையும் உணர்வையும் நடுவுபோய் உருவு மதர்விழி யுடையவர் திறமினோ. |
(பொ-நி.) விடமென, அமுதென, மதனவேள் படையொடு, உயிரையும் உணர்வையும் உருவும் மதர் விழி உடையவர் திறமின்; (எ-று.) (வி-ம்.) கடல்-பாற்கடல். விடம்-நஞ்சு; மதனவேள்-மன்மதன். வழிபடு மதனவேள் என இயைக்க. படை - மலர்க் கணை. உருவும்- ஊடுருவிச்செல்லும். மதர் - செருக்கு. கண்ணே மன்மதன் படைகளைக் கொண்டிருத்தல் கூறப்பட்டது - மாதர்கண்கள் ஆடவர்கள் பிரியுங்கால் துன்பத்தையும் புணருங்கால் இன்பத்தையுஞ் செய்வனவாம். "நீங்கிற்றெறூஉம் குறுகுங்கால் தண்ணென்ணும்" என்னுங் குறளும் ஈண்டு எண்ணற் பாலதாம். (28) |