கொடியோடு வீழ்ந்து கிடக்கும் யானைகளைக் கூறியது 480. | சாய்ந்துவிழும் கடகளிற்றி னுடனே சாய்ந்து | | தடங்குருதி மிசைப்படியும் கொடிகள் தங்கள் காந்தருடன் கனலமளி யதன்மேல் வைகுங் கற்புடைமா தரைஒத்தல் காண்மின் காண்மின். | (பொ-நி.) களிற்றினுடனே சாய்ந்து, படியும் கொடிகள் காந்தருடன் வைகும் கற்புடைய மாதரை ஒத்தல் காண்மின்! (எ-று.) (வி-ம்.) கடம் - மதம். குருதி - செந்நீர். மிசை - மேலே. கொடிகள் -அரசர்க்குரிய கொடிகள். காந்தர். கணவர். கனல் - தீ. அமளி - படுக்கை. வைகுதல் - தங்குதல். அரசர் தம் கொடிகள் செந்நீரச் சேற்றில் வீழ்ந்துகிடக்கும் தோற்றம், கற்புடைமகளிர் தத்தம் காதலரோடு உடன்கட்டையேறிய காட்சிபோன்றிருந்தது. (9) |