கணவரைத் தேடிய மனைவியர் செயல்
 
481.தங்கணவ ருடன்தாமும் போக வென்றே
      சாதகரைக் கேட்பாரே தடவிப் பார்ப்பார்
எங்கணவர் கிடந்தவிடம் எங்கே யென்றென்று
     இடாகினியைக் கேட்பாரைக் காண்மின் காண்மின்.

     (பொ-நி.)  கனவருடன் தாமும் போக என்று,"கிடந்த இடம் எங்கே"
என்று என்று  சாதகரைக்  கேட்பார் ;  தடவிப்பார்ப்பார் ;  இடாகினியைக்
கேட்பாரைக் காண்மின் ! (எ-று.)

     (வி-ம்.)  சாதகர் - காளியின்   மெய்காப்பாளர்.   தடவிப்பார்ப்பார்
-தேடிக்காண்பர். இடாகினி - சுடலைப் பிணம்  தின்னும்  பேய்.
                                                          (10)