கணவனைக்கண்டு ஆவிசோர்ந்த மனைவி இயல்பு 482. | வாய்மடித்துக் கிடந்ததலை மகனை நோக்கி | | மணியதரத்து ஏதேனும் வடுவுண் டாயோ நீமடித்துக் கிடந்ததெனப் புலவி கூர்ந்து நின்றாவி சோர்வாளைக் காண்மின் காண்மின். |
(பொ-நி.) தலை மகனை நோக்கி ," வடு உண்டாயோ? மடித்துக் கிடந்தது(நன்று!)" எனப் புலவி கூர்ந்து, ஆவிசோர்வாளைக் காண்மின்! (எ-று.) (வி-ம்.) தலைமகன் - கணவன். மணி - அழகிய. அதரம் - உதடு. மடித்து:மடிந்து என்பதன் வலித்தல் விகாரம் : புலவி - வெறுப்பு (வெற்றிபெற்று மீளாது மடிந்து வீழ்ந்தமையின்). கூர்தல்-மிகுதல். ஆவி-உயிர். சோர்வாள்-குறைபவள். (11) |