கணவனைக்கண்டு ஆவிசோர்ந்த மனைவி இயல்பு

482.வாய்மடித்துக் கிடந்ததலை மகனை நோக்கி
      மணியதரத்து ஏதேனும் வடுவுண் டாயோ
நீமடித்துக் கிடந்ததெனப் புலவி கூர்ந்து
     நின்றாவி சோர்வாளைக் காண்மின் காண்மின்.

      (பொ-நி.)  தலை  மகனை நோக்கி ," வடு உண்டாயோ? மடித்துக்
கிடந்தது(நன்று!)" எனப்  புலவி  கூர்ந்து,  ஆவிசோர்வாளைக்  காண்மின்!
(எ-று.)

     (வி-ம்.)  தலைமகன் - கணவன்.  மணி - அழகிய. அதரம் - உதடு.
மடித்து:மடிந்து   என்பதன்   வலித்தல்    விகாரம்  :  புலவி -  வெறுப்பு
(வெற்றிபெற்று மீளாது மடிந்து வீழ்ந்தமையின்). கூர்தல்-மிகுதல். ஆவி-உயிர்.
சோர்வாள்-குறைபவள்.                                         (11)