கணவனைத் தழுவி உயிர்விட்ட பெண்டிர் இயல்பு
 
483.தரைமகள்தன் கொழுநன்றன் உடலந் தன்னைத்
      தாங்காமல் தன்னுடலாற் றாங்கி விண்ணாட்
டரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
     ஆவிஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்.

     (பொ-நி.) கொழுநன்  உடலம்தன்னைத்  தரைமகள் தாங்காமல் தன
உடலால் தாங்கி,  அரமகளிர்  புணரா  முன்னம்  ஒக்கஆவி  விடுவாளைக்
காண்மின்;(எ-று.)

     (வி-ம்.) தரை  மகள் - மண் மகள்.  உடலால்  தாங்கி -அணைத்து
என்றபடி. அரமகள்-தெய்வப்பெண்.  அவ்வுயிர்-அக்  கணவனுடைய  உயிர்.
ஆவி-உயிர். ஒக்க-ஒருசேர.
                                                           (12)