கணவன் தலை பெற்ற மனைவியின் செயல்
 

484. பொருதடக்கை வாளெங்கே மணிமார் பெங்கே
       போர்முகத்தில் எவர்வரினும் புறங்கொ டாத
பருவயிரத் தோளெங்கே எங்கே யென்று
      பயிரவியைக் கேட்பாளைக் காண்மின் காண்மின்.

     (பொ-நி.) பயிரவியை ,"கை, வாள் எங்கே,  மார்பு  எங்கே, தோள்
எங்கே"  என்று  கேட்பாளைக்  காண்மின் ; (எ-று.)

     (வி-ம்.) பொருதடக்கை - போர்செய்கின்ற  நீண்ட  கை. கைவாள்:
உம்மைத்தொகை. மணி-அழகிய. பரு - பருத்த.  வயிரம் - அழுத்தமானது.
பயிரவி-யோகினி.
                                                         (13)