களம் தாமரைப் பொய்கை போன்று காட்சியளித்தது | 487. | மிடையுற்ற தேர்மொட்டு மொட்டொக்க | | | வெஞ்சோரி நீரொக்க வீழ்தொங்கல்பா சடையொக்க அடுசெங்க ளம்பங்க யப்பொய்கை யாமாறு காண்மின்களோ. |
(பொ-நி.) தேர் மொட்டு மொட்டு ஒக்க, சோரி நீர் ஒக்க, தொங்கல் பாசடைஒக்க, செங்களம் பங்கயப் பொய்கை ஆமாறு காண்மின்கள்; (எ-று.) (வி-ம்.) மிடைதல்-நெருங்குதல், மொட்டு - தேரின் கூம்பு, மொட்டு -தாமரை மொட்டு. சோரி-குருதி. தொங்கல்-ஆடவர்மயிர். பாசடை- பசிய இலை. அடுசெங்களம் - போர்புரிகின்ற சிவந்த போர்க்களம். பங்கயம் -தாமரை. (16) |