தோற்ற இயல்பு கூறி விளித்தது 49. | முறுவல் மாலையொடு தரள மாலைமுக | | மலரின் மீதும்முலை முகிழினும் சிறுநி லாவும்அதின் மிகுதி லாவும்என வருந லீர்கடைகள் திறமினோ. | (பொ-நி) முறுவல்மாலையொடு தரளமாலை, சிறுநிலாவும் மிகு நிலாவுமென வருநலீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) முறுவல் மாலை-பல் வரிசை. தரளம்-முத்து. முகிழ்-மொட்டு. சிறுநிலா- மூன்றாம் பிறை. மிகுநிலா-நிறை நிலா. என-என்று தோன்றுமாறு. வரும் - நடந்து வரும். நலீர் - நல்லீர்; பெண்களே. பல்வரிசையும், முத்துமாலையும், பிறைநிலாவும் நிறைநிலாவும் போன்றன. பல்வரிசை சிற்றளவினவாகலான் அது, இளம்பிறையின் ஒளிக்கும், முத்துமாலை வட்டவடிவமாகப் பெரிதாக இருத்தலின், நிறைநிலாவின் ஒளிக்கும் உவமையாக்கி உரைத்தார். (29) |