வில் வாள் வீரர் கிடந்தமை கண்டு கூறியது
 

490. வருஞ்சேனை தஞ்சேனை மேல்வந்து
       றாமேவில் வாள்வீரர் வாணாளுகக்
கருஞ்சேவ கஞ்செய்து செஞ்சோற
      றச்செய்த கைம்மாறு காண்மின்களோ.

     (பொ-நி.)வில்  வாள்  வீரர்  சேனை,  தம் சேனை மேல் உறாமே;
சேவகம் செய்து, செஞ்சோறு அறச்செய்த கைம்மாறு  காண்மின்கள்; (எ-று.)

     
(வி-ம்.) வரும்  சேனை -எதிர்த்துவரும் படைகள், உறுதல்-சார்(ந்து
அழித்)தல்.  வாணாள் - தங்கள்  வாழ்நாள.்  உக-கெட.  கருமை-வலிமை.
கருஞ்சேவகம் -வலிமை காட்டும் போர்ச்செயல். செஞ்சோறு-செஞ்சோற்றுக்
கடன். அற-கழிய. கைம்மாறு-மாற்றுதவி.
                                                          (19)