குருதிக் கடல்

493.அவர்இபஞ் சொரிமதங் கழிஎனப் புகமடுத்
       தவர்பரித் திரையலைத் தமர்செய்கா லிங்கர்தம்
கவரிவெண் நுரைநிரைத் தவருடற் குருதியின்
      கடல்பரந் தோடுமா காண்மினோ காண்மினோ.

     (பொ-நி.) மதம்  கழி  என  மடுத்து,  பரித்திரை  அலைத்துக்கவரி
வெண்ணுரை நிரைத்து, உடற் குருதியின் கடல்  பரந்து  ஓடுமா  காண்மின்;
(எ-று.)

      (வி-ம்.) அவர்-கலிங்கர், இபம்-யானை.  கழி-கடற்கரைக்  கால்வாய்.
புக மடுத்து-தன்னுடன் வந்து  விழ, தான்  ஒன்றாகக்  கலந்து.  பரி-குதிரை.
திரை - அலை.  குதிரை  அலைகளைப்  போன்றிருந்தன  வென்க  அமர்
-போர். கவரி நுரை  போன்றிருந்தன  என்க.  அவர். கலிங்கர். யானையின்
மதநீர் கடற்கால்வாய் போன்றிருந்ததென்க. குருதியே கடலாமென்க.
                                                          (22)