யானைநிரை கடலணை போன்றமை 494. | புவிபுரந் தருள்செயும் சயதரன் ஒருமுறைப் | | புணரிமெல் அணைபடப் பொருவில்வில் குனிதலின் கவிகுலம் கடலிடைச் சொரிபெருங் கிரியெனக் கரிகளின் பிணம்இதிற் காண்மினோ காண்மினோ. |
(பொ-நி.) ஒருமுறை சயதரன் வில் குனிதலின், கவிகுலம் கடலிடைச்சொரி, பெருங்கிரி என, இதில் கரிகளின் பிணம் காண்மின் ! (எ-று.) (வி-ம்.) புவி - உலகு. புரந்து - காத்து: வினையெச்சம். சயதரன் -குலோத்துங்கன் (ஆகிய திருமால்) ஒரு முறை இராமனாய்ப் பிறந்தகாலை. புணரி -கடல். பட-உண்டாக. பொருவு இல் - ஒப்பற்ற. குனிதல் - வளைதல். இராமன் வில்வளைத்துக் கணைதொடுத்த பின்பே வருணன் பணிந்தமையின் இங்ஙனம் கூறப்பட்டது, கவி-குரங்கு, கிரி-மலை, கரி-யானை. (23) |