கண்விழித்துக் கிடக்கும் வீரர் நிலை 496. | விண்ணின்மொய்த் தெழுவிமா னங்களிற் சுரர்களாய் | | மீதுபோ முயிர்களே யன்றியே இன்றுதம் கண்ணிமைப் பொழியவே முகமலர்ந் துடல்களும் கடவுளோர் போலுமா காண்மினோ காண்மினோ. | (பொ-நி.) சுரர்களாய்ப்போம் உயிர்களே அன்றி, இன்று இமைப்பு" ஒழிய, முகமலர்ந்து, உடல்களும் கடவுளோர் போலுமா காண்மின் ! (எ-று.) (வி-ம்.) விண்-வானம். மொய்த்தல் -நெருங்கல். சுரர்-தேவர். உயிர ்-வீரர் உயிர். இன்று-இப்பொழுது. கண்இமைப்பு ஒழிய-கண்கள் இமைத்தலை விடலாக. உடல் -வீரர் உடல். கடவுளோர்-தேவர். போலும் ஆ-ஒத்திருக்கும் இயல்பை: ஆறு-ஆ எனக் கடைக்குறைந்து நின்றது. (25) |