நான்முகன் வணக்கம் 5. | உகநான்கும் பொருள்நான்கும் | | உபநிடதம் ஒருநான்கும் முகநான்கும் படைத்துடைய முதல்வனையாம் பரவுதுமே. | 6. | நிலநான்கும் திசைநான்கும் | | நெடுங்கடல்கள் ஒருநான்கும் குலநான்கும் காத்தளிக்கும் குலதீபன் வாழ்கவென்றே. | (பொ-நி) குலநான்கும் அளிக்கும் குலதீ்பன் வாழ்க என்று, முகம் நான்கும் உடைய முதல்வனைப் பரவுதும். (எ-று.) (வி-ம்.) உகம்-யுகம்; ஊழிக்காலம். பொருள் நான்கு-அறம், பொருள், இன்பம், வீடு. உபநிடதம் நான்கு - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம். முதல்வன் - பிரமன். நிலநான்கு - குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல். அளித்தல் - அருள் செய்தல். குலதீபன் - குலோத்துங்கன். குலஞ்சிறந்து விளங்க நின்றமையின் குலதீபன் என்றார். ஈண்டும் ஆட்சிப் பரப்புக் குறிக்கப்பட்டது. |