500. | வாயகலம் பரத்தமொடு நிணங்கொண் டோட |
| மற்றதனை வள்ளுகிரின் பருந்து கோணல் வாய்அகலம் பரத்தினிடைக் கௌவி வல்வாய் வகிர்ப்பட்டு நிலம்பட்ட வண்ணங் காண்மின். |
(பொ-நி.) அம்பு(ஐ)நிணத்தொடு அரத்தம் கொண்டு ஓட பருந்து
அதனை வாய் கௌவி , வாய் வகிர்ப்பட்டு நிலம்பட்ட வண்ணம்
காண்மின்; (எ-று.)
(வி-ம்.) வாய் - அம்பின் கூரிய முனை. அரத்தம் - இரத்தம்.
நிணத்தால் பொதியப்பெற்றவோர் அம்பை இரத்தவெள்ளம் இழுத்துச்
சென்றதென்க. வள்-கூர்மை. உகிர்-நகம். கோணல்-வளைவு. வாய்-அலகால்.
அகல்-விரிந்த. அம்பரம்- வாணம். வகிர்பட்டு-(நிணத்துள் மறைந்திருந்த
அம்பால் பிளவுண்டு. நிலம்படுதல்-வீழ்தல். (29)