மார்பில் விழுப்புண்பட்ட யானைவீரரைக் கூறியது.
 

502.முதுகுவடிப் படியிருக்கும் என்ன நிற்கும்
      முனைக்களிற்றோர் செருக்களத்து முந்துதங்கள்
முதுகுவடுப் படும்என்ற வடுவை அஞ்சி
     முன்னம்வடுப் பட்டாரை இன்னம் காண்மின்.

     (பொ-நி.) குவடு  இப்படி  இருக்கும்  என்ன   நிற்கும்  களிற்றோர்
வடுவை  அஞ்சி, முன்னம்  வடு்பட்டாரை  இன்னம்  காண்மின்! (எ-று.)

     
(வி-ம்.)  முது  குவடு-பெரிய  மலை.  முனை-போர். களிறு-யானை.
முதுகு வடுபடும்-பின்புறம்  காயம்  உண்டாம்.  வடுவை-பழியை.  முன்னம்
-மார்பு. காளி பேய்களுக்கு இங்ஙனம்  களம்  காட்டி  முடித்ததென்க.
                                                           (31)