காளி பேய்களைக் கூழடுமாறு மொழிந்தது 503. | களமடையக் காட்டுதற்கு முடிவ தன்று | | கவிழுமதக் கரிசொரியக் குமிழி விட்டுக் குளமடைபட் டதுபோலும் குருதி யாடிக் கூழடுமின் என்றருளக் கும்பிட் டாங்கே. | (பொ-நி.) "களம் காட்டுதற்கு முடிவதன்று; கரிசொரிய, குமிழிவிட்டு, மடைபட்டது போலும் குருதி ஆடி, கூழ் அடுமின் " என்று அருளக் கும்பிட்டு; (எ-று.) (வி-ம்.) அடைய-முழுதும். முடிவது அன்று-முடியாது; இயலாது. கவிழும் -இறந்து வீழ்ந்த. கரி-யானை. மடை-நீர் புகும் வாய். படுதல் -அழிதல். குருதி-செந்நீர். ஆடுதல்-நீராடுதல். கூழ்-உணவு. அடுதல்-சமைத்தல். கும்பிட்டு பேய்கள் கும்பிட்டு. மடை அழிந்த குளம்போல் பெருகியது குருதி யென்க. (32) |