எண்ணெய் தேய்த்தபின் முழுகல்
 
507. எண்ணெய்போக வெண்மூளை
       என்னுங் களியான் மயிர் குழப்பிப்
பண்ணையாகக் குருதிமடுப்
     பாய்ந்து நீந்தி யாடீரே.

      (பொ-நி.) வெண்மூளை  என்னும்  களியால்  மயிர்  குழப்பி, குருதி
மடுப்பாய்ந்து நீந்தி ஆடீர் ; (எ-று.)

       (வி-ம்.) வெண்    மூளை-வெள்ளை    நிற    மூளை.   களி-சேறு.
குழப்பி-இட்டுத்   தேய்த்து,   பண்ணை-கூட்டம்.  குருதி -செந்நீர். மடு-நீர்
நிலை, ஆடீர்-விளையாடீர்.                                     (36)