உடை உடுத்தல் 509. | ஆழ்ந்த குருதி மடுநீந்தி | | அங்கே இனையா திங்கேறி வீழ்ந்த கலிங்கர் நிணக்கலிங்கம் விரித்து விரித்துப் புனையீரே. | (பொ-நி.) மடு நீந்தி, இனையாது, ஏறி, நிணக்கலிங்கம் விரித்து விரித்துப் புனையீர் ! (எ-று.) }
(வி-ம்.) குருதி மடு-இரத்தத் தடாகம். இனைதல்-வருந்தல். நிணம்-கொழுப்பு. கலிங்கம் -ஆடை. புனைதல்-அணிதல். (38) |