கூடல் இழைத்த இயல்பு கூறி விளித்தது

51. மெய்யில ணைத்துருகிப் பையஅ கன்றவர்தாம்.
     மீள்வரெ னக்கருதிக் கூடல்வி ளைத்துஅறவே
கையில ணைத்தமணல் கண்பனி சோர்புனலில்
   கரையவி ழுந்தழுவீர் கடைதிற மின்திறமின் .

     (பொ-நி)  அகன்றவர்   மீள்வரெனக்  கருதி,   கூடல் விளைத்து,
அறவே, மணல் புனலில் கரைய அழுவீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) மெய் - உடல்.  அணைத்து - தழுவி. உருகி-மனம் உருகி
(க் காட்டி) பைய - மெல்ல. அகன்றவர் - பிரிந்தவர். கையில் அணைத்த-
கைகளினால் சேர்த்த.  கூடல் விளைத்தல்- மணலில் சுழித்துக் குறியறிதல்.
அறவே - சுழியாமல்  நீங்கி  நிற்க.  புனல்-நீர.்  கூடல் இழைத்த மணல்
கண்ணீரால்  கரைந்தது. கூடற்சுழி கூடாமற் போகவே கணவர் விரைவில்
வந்து  கூடாரென  மிகுதியாக வருந்தலாயினர் என்க.             (31)