கைவளையும் காலணியும் புனைதல் 510. | மதங்கொள் கரியின் கோளகையை | | மணிச்சூ டகமாச் செறியீரே பதங்கொள் புரவிப் படிதரளப் பொற்பா டகமாப் புனையீரே. | (பொ-நி.) கோளகையைச் சூடகமாகச் செறியீர்; புரவிப்படி பாடகமாகப் புனையீர் (எ-று.) (வி-ம்.) கரி-யானை. கோளகை-கிம்புரி. சூடகம்-கைவளை. புரவிபதம் கொள்படி-குதிரை மேலிடும் தவிசோடு தொடர்புற்று, ஏறிச் செலுத்துவோர் பாதத்தை வைத்தற்கிடமாயுள்ளது. தரளம்-முத்து. பாடகம்-காலணி. (39) |