காதணி புனைதல்
 
511.ஈண்டும் செருவிற் படுவீரர்
       எறியும் பாரா வளையடுக்கி
வேண்டுமளவும் வாய்நெகிழ்த்து
     விடுகம் பிகளாப் புனையீரே.

      (பொ-நி.)பாராவளை  அடுக்கி,  வாய்நெகிழ்த்து, விடுகம்பிகளாகப்
புனையீர் ! (எ-று.)

      
(வி-ம்.)   ஈண்டுதல்-முதிர்தல்.     செரு-போர்.  படுதல்-இறத்தல்.
பாராவளை-வளைதடி.    அடுக்கி-ஒன்றின்மேல்    ஒன்றாகக்     குவித்து.
நெகிழ்த்து-அகற்றி.  விடுகம்பி-காதணி.                           (40)