இதுவும் அது
 

512.பணைத்த பனைவெங் கரிக்கரத்தால்
       பரிய கருநாண் கட்டீரே
இணைத்த முரசம் வாள்காம்பிட்
     டிரட்டை வாளி ஏற்றீரே.

      (பொ-நி.)  கரிக்கரத்தால்  பருநாண் கட்டீர் ; முரசம்  வாள் காம்பு
இட்டு, வாளி ஏற்றீர் ! (எ-று.)

      (வி-ம்.)பணைத்தல்-பருத்தல். பனை-பனைபோன்ற.  கரம்-துதிக்கை. பரிய-பெரிய.நாண்: காதில் அணிவது :காப்புக் கயிறுமாம். இணைத்த  முரசம்
-ஒன்று   சேர்த்த   முரசுகளை.   காம்பு    இட்டு  -  காம்பாக   இட்டு வாளி; ஒருவகைக்காதணி.                                      (41)