தோளணியும் கழுத்தணியும் புனைதல்
 

513.பட்ட புரவிக் கவிகுரத்தால்
       பாகு வலயஞ் சாத்தீரே
இட்ட சுரிசங் கெடுத்துக்கோத்து
     ஏகா வலியுஞ் சாத்தீரே.
   
      (பொ-நி.) கவி   குரத்தால்   பாகு   வலையம்   சாத்தீர்;  சங்கு
எடுத்துக்கோத்து ஏகாவலியும் சாத்தீர்! (எ-று.)

      
(வி-ம்.)   பட்ட-இறந்த.  புரவி-குதிரை. கவி-கவிந்த. குரம்-குளம்பு.
பாகு  வலயம்-தோள்வளை.  இட்ட-வீரர் போகவிட்ட. சுரி-வளைந்த. சங்கு
-முழக்கிய  சங்கு. ஏகாவலி -ஒற்றைச்  சரமாலை. சாத்தி அணிவீராக.  (42)