உலக்கை கொண்டு குற்றல்
 

526.இந்த உரற்கண் இவ்வரிசி
      எல்லாம் பெய்து கொல்யானைத்
தந்த உலக்கை தனையோச்சிச்
     சலுக்கு முலுக்கெனக் குற்றீரே.

     (பொ-நி.) உரற்கண்  அரிசி  எல்லாம்   பெய்து,   யானைத்  தந்த
உலக்கைதனை  ஓச்சிக்  குற்றீர்! (எ-று.)

     
(வி-ம்.)  கொல்யானை-கொல்லப்பட்ட யானை. தந்தமாகிய உலக்கை
என்க. ஓச்சி-எடுத்து. சலுக்கு முலுக்கு : ஒலிக்குறிப்பு. குற்றீர்-குற்றுங்கள். (55)