குலோத்துங்கனைப் பாடிக் குற்றுதல் 528. | கவன நெடும்பரி வீரதரன் | | காவிரி நாடுடை யானிருதோள் அவனி சுமந்தமை பாடீரே அரவு தவிர்ந்தமை பாடீரே. |
(பொ-நி.) வீரதரன், நாடுடையான் தோள் அவனி சுமந்தமை பாடீர்! அரவு தவிர்ந்தமை பாடீர்! (எ-று.) (வி-ம்.) கவனம் - விரைவு. பரி - குதிரை. தரன்-தரித்தவன். அவனி- உலகம். சுமந்தமை - ஆட்சிப் பொறுப்பேற்றமை. அரவு - ஆதிசேடன். தவிர்ந்தமை-உலகில் சுமை ஒழிந்தமை. (57) |