சேரர் பாண்டியரை வென்றமை கூறிக் குற்றுதல்

529.மன்னர் புரந்தரன் வாளபயன்
       வாரணம் இங்கு மதம்படவே
தென்னர் உடைந்தமை பாடீரே
     சேரர் உடைந்தமை பாடீரே.

     (பொ-நி.) அபயன் வாரணம் மதம்பட, தென்னர் உடைந்தமை பாடீர்!
சேரர் உடைந்தமை பாடீர்! (எ-று.)

     (வி-ம்.) புரந்தரன்-இந்திரன். வாள்  அபயன்-வாட்படைகொண்டோன்.
வாரணம்-யானை.  தென்னர்- பாண்டியர்.  உடைதல்-தோற்றோடுதல்.  சேரர்
-சேரமன்னர்.                                                 (58)