சேரர் பாண்டியர் வணங்கியது கூறிக் குற்றுதல்

530.வணங்கிய சேரர் மணிமுடியும்
       வழுதியர் தங்கள் மணிமுடியும்
பிணங்கிய சேவடி பாடீரே
     பெருமான் திருவடி பாடீரே.

     (பொ-நி.) சேரர்  மணி  முடியும்  வழுதியர்  தங்கள்  மணி முடியும்
பிணங்கிய  சேவடி  பாடீர்!  பெருமான்  திருவடி  பாடீர்!  (எ-று.)

     (வி-ம்.) வழுதியர் - பாண்டியர்.  பிணங்கிய - ஒன்று சேர்ந்த. சேவடி
-சிவந்த அடிகள். பெருமான்-பெருமைமிக்கவன்.                     (59)