உலகம் மகிழ ஆட்சிபுரிதல் கூறிக் குற்றுதல்
 
533.எற்றைப் பகலினும் வெள்ளணிநாள்
       இருநிலப் பாவை நிழலுற்ற
கொற்றக் குடையினைப் பாடீரே.
     குலோத்துங்கன் சோழனைப் பாடீரே.

     (பொ-நி.)  வெள்ளணி  நாள்    (போல்),   நிலப்பாவை   நிழலுற்ற,
குடையினைப்  பாடீர்!  சோழனைப்  பாடீர்!  (எ-று.)

     
(வி-ம்.) எற்றைப்  பகல் - எந்த நாள். வெள்ளணிநாள்-அரசர் பிறந்த
நாள்.  நிலப்பாவை - மண்மகள்.  நிழல் - துன்பம்  நீக்கி  இன்பம்  தருதல்.
கொற்றக்குடை - வெற்றிக்குடை.                                  (62)