கருணாகரனைப் பாடிக் குற்றியது 534. | வண்டை வளம்பதி பாடீரே | | மல்லையும் கச்சியும் பாடீரே பண்டை மயிலையும் பாடீரே பல்லவர் தோன்றலைப் பாடீரே. |
(பொ-நி.) வண்டைப்பதி பாடீர்! மல்லையும் கச்சியும் பாடீர்! மயிலையும் பாடீர்! பல்லவர் தோன்றலைப் பாடீர்! (எ-று.) (வி-ம்.) வண்டை- கருணாகரன் ஊர். கச்சி - காஞ்சிபுரம்.பல்லவர் தோன்றல்- கருணாகரன். மல்லை, கச்சி, மயிலை என்பன கருணாகரன் ஆட்சிக் குட்பட்டிருந்தன போலும். தொண்டையர் வேந்தன் எனப் பின்னும் வருவது காண்க. (63) |