பல்லரசரும் அடிவணங்கல் கூறிக் குற்றியது
 
537.முடிசூடும் முடியொன்றே முதலபயன் எங்கோமான்
 அடிசூடும் முடியெண்ணில் ஆயிரநூ றாயிரமே.
 

     (பொ-நி.) அபயன் முடி சூடும் முடி ஒன்றே; அடிசூடும்  முடி ஆயிர
நூறாயிரம்; (எ-று.) 

     
(வி-ம்.) முடி-தலை.  முடி-கிரீடம். அடி-பாதம், முடி-சிற்றரசர்முடிகள்.
முதற்குலோத்துங்கசோழனின் தலைஒன்றே முடிசூடுதற்குரியது.  மற்ற  அவன்
அடி   சூடுவன   எண்ணற்ற   அரசர்களின்   முடிகளே  என்பது,  இவன்
திருவடிகளில்  வணங்கும்  வேந்தர்க்கு  அளவில்லை  என்றபடியாம்.  (66)