பகைவேந்தர் அழிந்தமை கூறிக் குற்றுதல
 
538.முடியினால் வழிபட்டு மொழிந்ததிறை இடாவேந்தர்
 அடியினால் மிதிபட்ட அருவரைநூ றாயிரமே.
 

     (பொ-நி.)வழிபட்டுத் திறைஇடாவேந்தர் அடியினால், மிதிபட்ட வரை
நூறாயிரம்; (எ-று.)

     (வி-ம்.)  வழிபடுதல்  - வணங்கல்.   மொழிந்த - குலோத்துங்கன் 
மொழிந்த.  அடி - பாதம்,  வரை-மலை. திறைஇடாவேந்தர் மலைகளிலோடி
யொளிக்க  நேர்ந்த  தென்க.  திறைசெலுத்தா  வேந்தர் ஓடியோடி ஒளித்த
மலைகள் எண்ணில. எனவே,  குலோத்துங்கன் ஏற்றங் கூறிய தறிக.    (67)