மாற்றரசர் ஒளி இழந்த தன்மை கூறிக் குற்றியது 539. | தார்வேய்ந்த புயத்தபயன் தன்னமைச்சர் கடைத்தலையில் | | பார்வேந்தர் படுகின்ற பரிபவம்நூ றாயிரமே. | (பொ-நி.) அபயன்தன் அமைச்சர் கடைத்தலையில் வேந்தர் படுகின்ற பரிபவம் நூறாயிரம்; (எ-று.) (வி-ம்.) தார்-மாலை. கடைத்தலை-தலைவாயில்; முற்றம் -சொல்நிலை மாறிய இலக்கணப் போலி. பரிபவம்-பெருமைக்குறைவு. நூறாயிரம் - மிகப்பல. பல வேந்தர் குலோத்துங்கன் அருள்பெற அவன் அமைச்சரை நாடியது கூறியவாறாம். (68) |