மறைவளர்த்தமை கூறிக் குற்றியது

 
540.தாங்காரப் புயத்தபயன் தண்ணளியால் புயல்வளர்க்கும்
 ஓங்கார மந்திரமும் ஒப்பிலநூ றாயிரமே.
 

     (பொ-நி.) அபயன் அளியால் புயல் வளர்க்கும் மந்திரமும் நூறாயிரம்;
(எ-று.)

     (வி-ம்.) ஆரம்  தாங்கு புயம்  என  இயைக்க. ஆரம்-மாலை. தாங்கு
-அணிகின்ற; முக்கால  வினைத்தொகை. அளி - அருள். புயல்-மழை.ஓங்கார
மந்திரம்-மறை  நூலிலுள்ளன. ஒப்புஇல வரையரை இல்லாதன.மழை தவறாது
பொழிதற்குக்     காரணமான    மறை     ஓம்புதலைக்   குலோத்துங்கன்
மேற்கொண்டிருந்தான்  என்பதாம்.                               (69)