இதுவும் அது 544. | சூழிமுகக் களிற்றபயன் தூதுநடந் தருளியநாள் | | ஆழிமுதற் படையெடுத்த அணிநெடுந்தோ ளாயிரமே. |
(பொ-நி.) அபயன் தூது நடந்தருளிய நாள்படை (யை) எடுத்த தோள் ஆயிரம்; (எ-று.) (வி-ம்.) சூழி-முகபடாம். களிறு-யானை. தூது-பாண்டவர்க்குத் தூது. ஆழி-சக்கரம். படை - போர்க்கருவிகள். அணி - அழகிய. கண்ணபிரான் துரியோதனன்பால் தூதுசென்று ஆங்கே பேருருவங்கொண்டு நின்ற பாரத வரலாற்றைக் குறித்து. இதுவும் அவ்வாறே ஏற்றிக் கூறியதறிக. (73) |