குற்றிய அரிசியைப் புடைத்தல

545.பல்லரிசி யாவுமிகப் பழவரிசி தாமாகச்
 சல்லவட்டம் எனுஞ்சுளகால் தவிடுபடப் புடையீரே.
 

     (பொ-நி.) அரிசி  யாவும்  பழ  அரிசி  ஆக,  சல்லவட்டம்  எனும்
சுளகால்  புடையீர்!  (எ-று.)

     (வி-ம்.) பல்லரிசி :  பண்புத்தொகை.  ஆக-ஆகுமாறு. சல்லவட்டம்-ஒருவகைக் கேடகம். சுளகு - முறம்.  தவிடுபட- தவிடுபோக.          (74)