நோயும் மருந்துமாந்தன்மை கூறி விளித்தது 55. | தங்குகண் வேல்செய்த புண்களைத் | | தடமுலை வேதுகொண் டொற்றியும் செங்கனி வாய்மருத் தூட்டுவீர் செம்பொன் நெடுங்கடை திறமினோ. | (பொ-நி.) கண்வேல் செய்த புண்களை, வேதுகொண்டொற்றியும், வாய்மருந் தூட்டுவீர் திறமின்; (எ-று.) (வி-ம்.) கண்வேல் - ( தம்) கண்ணாகிய வேல். வேது - நோய்க்குச் சூடான பொருள்களால் வேது கொடுத்தல் இயல்பாம். ஒற்றுதல் - ஒற்றடங் கொடுத்தல். தங்கு - படிந்த; சேர்ந்த. வெப்பம் ஊட்டுதல். இதனை ‘கொம்மை வரி முலை வெம்மைவேதுறீஇ' என்றார் இளங்கோவடிகளும். வாய்மருந்து - அதரபானம். புண்ணுக்கு வேதும் மருந்தும் ஈண்டுக் கூறப்பட்டன. (35) |