இதுவும் அது 554. | வெந்த இரும்பிற் புகும்புனல்போல் | | வெந்தீப் பசியால் வெந்துஎரியும் இந்தவிடம்பை நாத்தோய்க்கில் இக்கூ ழெல்லாம் சுவறாதோ. | (பொ-நி.) எரியும் நா தோய்க்கில், இரும்பில் புகும் புனல் போல் கூழெல்லாம் சுவறாதோ ! (எ-று.) (வி-ம்.) வெந்த. பழுக்கக் காய்ச்சிய. புனல்-நீர். விடம்பை-பிளவுபட்ட. நா தோய்க்கில்-நாவைநனைத்தாலும். பசியால் வெந்து மிகச் சூடேறியுள்ள நம் நாவை இக் கூழில் வைத்தோமானாலும்கூழ் நீர்ப்பசையற்றுவற்றிச் சுண்டிப்போகுமென நாவின் வெப்பம் கூறியபடி. சுவறுதல் - வறண்டுபோதல். (83) |