உணவுகொள்ள நிலம் திருத்தல் 557. | சோரும் களிற்றின் வாலதியால் | | சுழல அலகிட்டு அலைகுருதி நீருந் தெளித்துக் கலம்வைக்க நிலமே சமைத்துக் கொள்ளீரே. |
(பொ-நி.) களிற்றின் வாலதியால் அலகிட்டு, குருதிநீரும் தெளித்து, நிலம் சமைத்துக்கொள்ளீர் ! (எ-று.) (வி-ம்.) சோர்தல் - (இறந்து) சோர்ந்து கிடத்தல். வாலதி - வால். அலகிட்டு-பெருக்கி. குருதி-செந்நீர். கலம்- ஏனம். சமைத்தல் - ஏற்படுத்தல், இறந்தயானைகளின் வாலையே துடைப்பமாகக் கொண்டு நிலத்தைத் துப்புரவாக்கி அவ்விடத்தில், குருதிநீரைத் தெளித்து உண்கலங்களை வைக்க இடம் ஏற்படுத்திக் கொள்ளுமாறு பேய் கூறிய தென்க. (86) |