கூழைப் பங்கிடக் கருவி கொண்டது 560. | நிலத்தைச் சமைத்துக் கொள்ளீரே | | நெடுங்கைக் களிற்றின் இருசெவியாம் கலத்திற் கொள்ளக் குறையாத கலங்கள் பெருக்கிக் கொள்ளீரே. |
(பொ-நி.) நிலத்தைச் சமைத்துக் கொள்ளீர்! களிற்றின் இருசெவியாம் கலங்கள் பெருக்கிக் கொள்ளீர்! (எ-று.) (வி-ம்.) சமைத்தல்-திருத்தல். களிறு - யானை. கலம் -பன்னிரண்டு மரக்கால். கலம் - ஏனம். பெருக்கிக்கொள்ளீர் - மிகுதியாக அமைத்துக்கொள்ளுங்கள். களிற்றின் காதுகளையே கூழை முகந்தெடுக்கும் ஏனங்களாகக் கொள்க என்றபடியாம். (89) |