பகல் விளக்கும் பாவாடையும

561.கதம்பெற் றார்க்கும் செறுநர்விழிக்
        கனலும் நிணமும் அணங்கின்பால்
பதம்பெற் றார்க்குப் பகல்விளக்கும்
      பாவா டையுமாக் கொள்ளீரே.

     (பொ-நி.) பதம் பெற்றார்க்கு, செறுநர் விழிக் கனலும் நிணமும், பகல் விளக்கும் பாவாடையுமாக் கொள்ளீர்! (எ-று.)

      (வி-ம்.) கதம் - சினம்.  ஆர்த்தல் - ஒலித்தெழல்.  செறுநர் - வீரர். விழிக்கனல் -  விழியினின்று    பெருகும்   கனல்  (சினத்தால்  பெருகியது
இன்னும்  குன்றவில்லை  யென்க.)  நிணம் - கொழுப்பு.  அணங்கு - காளி.
பதம் - உயர்பதம். பகல்விளக்கு -  பகலில்   விளக்கேற்றல்.   பா  ஆடை
-(உணவுபடைக்க) விரிக்கப்படும் ஆடை.                           (90)