பிச்சை ஏற்கும் பார்ப்பனப் பேய்க்குக் கூழளித்தல்

565.அவதி இல்லாச் சுவைக்கூழ் கண்டு
        அங்காந்து அங்காந்து அடிக்கடியும்
பவதி பிட்சாந் தேகியெனும்
      பனவப் பேய்க்கு வாரீரே.

     (பொ-நி.) கூழ்கண்டு.  அங்காந்து  அங்காந்து, "பிட்சாந்தேகி" எனும்
பனவப் பேய்க்கு வாரீர்! (எ-று.)

     (வி-ம்.) அவதி - அளவு. அங்காந்து -வாய்திறந்து. பவதி-அம்மையே.
பிட்சாம் - பிச்சையை. தேகி - கொடு. பனவன்பார்ப்பன். ‘பவதி பிட்சாந்தேகி’
எனப்  பார்ப்பனப்  பேய்  ஏற்புரை  கூறிக்   கேட்டதற்குப்   பேய்   கூழ்
வார்க்குமாறு  கூறிற்று.                                         (94)