முதுபேய் சொல்லி முடித்ததும் காளி வியந்ததும் கூறியது  

209. எழுதி மற்றுரைசெய் தவரவர்கள் செய்பி ழையெலாம்
     எமர்பொ றுக்கஎன விப்படிமு டித்த இதனைத்
தொழுது கற்றனம் எனத்தொழுது சொல்லு மளவில்
   சோழ வம்சமிது சொன்ன அறிவென்ன வழகோ?

     (பொ-நி.) எழுதி, பொறுக்க, என இப்படி முடித்த  இதனை, கற்றனம்
எனச் சொல்லுமளவில், "சொன்ன அறிவு என்ன அழகோ," (எ-று.)

     (வி-ம்.) உரை செய்தல்-சொல்லல், எமர்-எம்மவர். சோழவம்சம்-சோழ
பரம்பரை.                                                   (32)