சூற்பேய்க்குக் கூழ் வார்த்தல்
 
571.அடைந்த செவிகள் திறந்தனவால்
  அடியேற்கு என்று கடைவாயைத்
துடைத்து நக்கிச் சுவைகாணும்
சூற்பேய்க்கு இன்னும் சொரியீரே.

     (பொ-நி.) செவிகள் திறந்தனவால் என்று,   கடைவாயைத் துடைத்து,
நக்கிச்  சுவை  காணும்  சூல்  பேய்க்கு  இன்னும்  சொரியீர்! (எ-று.)

     (வி-ம்.) அடைத்த  செவிகள் - பசியால்  அடைபட்டிருந்த  காதுகள்,
கூழ்கண்ட  மகிழ்ச்சியால்திறந்தன   என்க. கடைவாய் - வாயின்  கடைசியை. கூழ்கண்ட     அளவில்    வாயில்    நீர்    ஊறினமையின்   இருவாய்க்
கடைகளிலும்   நாவைச்   செலுத்தி  நக்கிற்றென்க.  சூல் -  கரு.  சொரியீர்
-கூழ்வாருங்கள்.                                              (100)