நடை இயல்புகூறி விளித்தது

58. உபய தனமசையில் ஒடியுமிடை நடையை
     ஒழியும் ஒழியுமென ஒண்சிலம்பு
அபய மபயமென அலற நடைபயிலும்
   அரிவை மீர்கடைகள் திறமினோ.
 
     (பொ-நி.) சிலம்பு "இடை ஒடியும்;  நடையை ஒழியும் ஒழியும்" என,
"அபயம் அபயம்" என அலற, நடை பயிலும் அரிவைமீர் திறமின்; (எ-று.)

     (வி-ம்.) உபயம்-இரண்டு. தனம்-கொங்கை.  இடை-இடுப்பு. ஒழியும்-
விட்டொழியும். ஒள்-ஒளி பொருந்திய. .அலற-ஒலி செய்ய. நடை பயிலும்-
நடக்கும். அரிவை - பெண்.  சிலம்பு  இடை  ஒடியுமென அரற்றியதாகக
்கூறினார். மாதர்கள் ஆடவர்களைப் போல் மிகுதியாக நடத்தலின்மையின
்நடை பயிலும் என்றார்.                                      (38)