இதுவும் அது 580. | தமக்கொரு வாயொடு வாய்மூன்றும் | | தாமினி தாப்படைத் துக்கொண்டு நமக்கொரு வாய்தந்த நான்முகனார் நாணும் படிகளித் துண்ணீரே. | (பொ-நி.) தமக்கு ஒரு வாயொடு வாய் மூன்றும் படைத்துக்கொண்டு, நமக்கு ஒருவாய் தந்த நான்முகனார் நாணும்படி உண்ணீர் ! (எ-று.) (வி-ம்.) ஒருவாய்- ஒரே வாய் - மேற்கொண்டு மூன்றுவாய் தமக்குப் படைத்துக்கொண்டிருக்கின்ற நான்முகனார் வஞ்சகர். எனவே, அவர் நாணும்படி ஒரே வாயால் நான்கு வாயினால் உண்ணுமளவுக்குமேல் நாம் உண்போம். நான்கு வாய் நமக்குப் படைத்துத் தந்திருந்தால் எவ்வளவு விரைவில் இக் கூழை உண்ணலாம் எனப் பேய்கள் கூறின. (109) |