உண்டபின் வெற்றிலைபாக்கு அயிலுதல் 583. | பண்ணும் இவுளிச் செவிச்சுருளும் | | பரட்டிற் பிளவும் படுகலிங்கர் கண்ணின் மணியிற் சுண்ணாம்பும் கலந்து மடித்துத் தின்னீரே. | (பொ-நி.) இவுளிச் செவிச்சுருளும், பரட்டிற் பிளவும் கண்ணின் மணியின் சுண்ணாம்பும் கலந்து மடித்துத் தின்னீர் (எ-று.) (வி-ம்.) பண்ணுதல்-அழகு செய்தல். இவுளி-குதிரை.சுருள்-வெற்றிலை. பரடு-கணைக்கால் (குளம்பு.)பிளவு-வெட்டுப்பாக்கு. மணி- வெண்மணி. கலந்து -ஒன்று சேர்த்து. போரில்! இறந்த குதிரைக் காதுகளாகிய வெற்றிலை, அதன் கால் குளம் பின் துண்டுகளாகிய வெட்டுப்பாக்கு, போர்வீரர்களின் கண்மணியாகிய சுண்ணாம்பு இவை கலந்து மடித்துத் தின்னுங்கள் எனப் பேய்கள் உண்டது. செரித்தற்கு வெற்றிலைச் சுருள் உண்டு களிப்பது கூறிற்றென்க. (112) |