இதுவும் அது
 

591.திசையிற் பலநர பாலர்முன்னே
      தெரிந்துரைக் குஞ்சிசு பாலன்வைத
வசையில் வயப்புகழ் வாழ்த்தினவே
     மனுகுல தீபனை வாழ்த்தினவே.

     (பொ-நி.) நரபாலர்  முன்னே, சிசுபாலன்  வைத,  புகழ் வாழ்த்தின;
குல தீபனை வாழ்த்தின; (எ-று.)

     
(வி-ம்.)திசை-எட்டுத்திசை. நரபாலர்-அரசர். தெரிந்து - குற்றமென்று
தெரிந்தும்.வைத புகழ்-புகழ்ச் செயல்களை இழிசெயலாகத் திரித்துக் கூறினன்
என்க.  வசை - இகழ்ச்சி. வயம் - வெற்றி. மனுகுலம் - சோழகுலம்.  தீபன்
்-  விளங்கவைத்தவன்.   ஈண்டும்     குலோத்துங்கன்    திருமாலாகவே
கூறப்பட்டுள்ளான்.  சிசுபாலன் கண்ணபிரானை  வைத  வரலாறுபாரதத்தில்
காண்க.                                                   (120)