இதுவும் அது | 593. | ஆழிகள் ஏழுமொர் ஆழியின்கீழ் | | | அடிப்பட வந்த அகலிடத்தை ஊழிதொ றூழியுங் காத்தளிக்கும் உலகுய்ய வந்தானை வாழ்த்தினவே. | (பொ-நி.) ஆழிகள் ஏழும் ஆழியின்கீழ் அடிப்பட, அகலிடத்தை, காத்தளிக்கும், உலகுய்ய வந்தானை வாழ்த்தின; (எ-று.) (வி-ம்.) ஆழி-கடலும் கடல்சூழ்ந்த நிலமும். ஓர் ஆழி-ஒப்பற்ற தன் ஆணைச்சக்கரம். அடிப்பட-அடங்க. வந்ததனக்கு உரிமையாகக் கிடைத்த, அகலிடம்-தமிழ் நாடு. ஊழி-யுகம். அளிக்கும் -அருள் செய்யும். உலகுய்ய வந்தான்-குலோத்துங்கன். பிறநாட்டிலும் தன் ஆணையைச் செலுத்தித் தன் நாட்டைக் காத்தான் என்க. (122) |