கரிகாலச் சோழனோடு ஒப்பிட்டுப் பேய்கள் வாழ்த்தியது

594.பூப்பது மத்தன் படைத்தமைத்த
       புவியை இரண்டா வதும்படைத்துக்
காப்பதும் என்கடன் என்றுகாத்த
     கரிகாலச் சோழனை வாழ்த்தினவே.

     (பொ-நி.) "புவியை, படைத்து, காப்பதும், என்கடன்  என்று"  காத்த கரிகாலச் சோழனை வாழ்த்தின; (எ-று.)

     
(வி-ம்.) பூ-பொலிவு  மிகுந்த.  பதுமம்-தாமரை.  பதுமத்தன்: பிரமன்.
புவி - உலகு.   இரண்டாவதும்   படைத்தது   மக்களை  ஒழுக்கநெறிகளின் நிற்கச்செய்தது  (தா.262  காண்க.)   கரிகாலச்   சோழன்போல்  புகழ்பெற்று விளங்கினமையின்   முன்னோனான  அவன்  பெயராலேயே  கூறப்பட்டான். முறைசெய்து    காப்பாற்றும்     மன்னவன்     மக்கட்கு    இறையென்று
வைக்கப்படுவோன்  ஆதலால்  இவ்வாறு  கூறினார்.                (123)